நமது கோட்டத்திற்கு ஒரு தொல்லை என்றால் எப்பொழுதும் ஆதரவு கொடுக்கும் நெல்லை கோட்டத்தின் 42வது கோட்ட மாநாடு பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. வரலாறு படைத்த நெல்லை மாநாடு . துணை பொது செயலர் தோழர் NS, கோவை மண்டல செயலர் தோழர் சஞ்சீவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த வெற்றி மாநாடு அது. நமது கோட்டத்தில் இருந்து 8 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். A.K.47 என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் S.K. JACOB RAJ அவர்கள் மீண்டும் செயலராக தேர்ந்தெடுக்க பட்டார்கள். அவருடைய தொழிற் சங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக